கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் முக்கிய அறிவிப்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 11 September 2022

கன்னியாகுமரி மாவட்ட மக்களுக்கு அமைச்சர் மனோதங்கராஜ் முக்கிய அறிவிப்பு.

கன்னியாகுமரி மாவட்டம் தமிழக தகவல் தொழில்நுட்பத் துறை அமைச்சருமான மனோததங்கராஜ் முக்கிய அறிவிப்பு என்ற தலைப்பில் சமூக வலைதளங்களில் விடுத்துள்ள அறிக்கையில் கூறியுள்ளதாவது :


கன்னியாகுமாரி மாவட்டத்தில் உள்ள பத்மநாபபுரம், கிள்ளியூர், விளவங்கோடு சட்டமன்ற தொகுதிகளை சார்ந்த மாற்றுத்திறனாளிகள் சான்று பெறுவதற்காக ஆசாரிப்பள்ளம் மருத்துவமனை வரை வெகு தூரம் பயணிப்பது பெரும் சிரமத்தை ஏற்படுத்துகிறது. 


இதனை இலகுவாக்கும் வகையில் மேற்கூறிய தொகுதிகளை சார்ந்த மக்கள் பெரிதும் பயன்பெறும் வகையில், ஒவ்வொரு வாரமும் செவ்வாய் கிழமைகளில் தக்கலை அரசு மாவட்ட தலைமை மருத்துவமனையில் வைத்து மாற்றுத்திறனாளி மருத்துவ சான்று வழங்கும் முகாம் துவங்க இருக்கிறது என்பதை அன்புடன் தெரிவித்துக் கொள்கிறேன். 


இம்முகாம் வரும் 3. 09. 2022 செவ்வாய் கிழமை அன்று முதல் ஆரம்பமாகிறது. தக்கலை மருத்துவமனையில் நுழைவு வாயிலுக்கு உள்ளே வலது புறமாக அமைந்துள்ள நேச்சுரோபதி ப்ளாக்கில் வைத்து இம்முகாம் நடைபெறுகிறது பயன்படுத்திக் கொள்ளுங்கள் என்று அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

No comments:

Post a Comment