பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Sunday, 25 September 2022

பாஜக பிரமுகர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு.

கன்னியாகுமரி மாவட்டம் கருமன்கூடல் பகுதியில் உள்ள பாஜக பிரமுகரும் தொழிலதிபருமான கல்யாணசுந்தரம் என்பவர் வீட்டில் நள்ளிரவு இருசக்கர வாகனத்தில் வந்த மர்ம நபர்கள் இரண்டு பேர் பெட்ரோல் குண்டுகளை வீசி சென்றுள்ளனர்.


ஜன்னலில் விழுந்த பெட்ரோல் குண்டு பெரிய அளவில் தீப்பற்றி எரியாததால் பெரும் சேதம் தவிர்க்கப்பட்டு 2-சொகுசு கார்களும் தப்பியது, தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு வந்த மண்டைக்காடு போலீசார் தடையங்களை சேகரித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.


இதற்கிடையே அந்த வீட்டில் பாஜகவினர் குவிய தொடங்கியுள்ளனர், இந்த நிலையில் மர்ம நபர்கள் இருசக்கர வாகத்தில் வந்து பெட்ரோல் குண்டை வீசி செல்லும் பரபரப்பு வீடியோ காட்சிகள் வெளியாகியுள்ளது.


பொது அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் குற்றச்செயல்களில் ஈடுபடும் குற்றவாளிகள், தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்படுவார்கள் என தமிழக காவல்துறை எச்சரித்துள்ளது.

No comments:

Post a Comment