கொலை மிரட்டல் விடுத் தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 8 September 2022

கொலை மிரட்டல் விடுத் தவர் மீது நடவடிக்கை எடுக்க கோரி குமரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு.

சரபுதீன் மகன் முஹம்மது ஆசிக் (25) குளச்சல் வி.கே.பி பள்ளி அருகில் இருக்கும் ஆட்டோ ஸ்டாண்டில் ஆட்டோ டிரைவராக பணி செய்து வருகிறார். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அமைப்பில் குளச்சல் நகரக் கிளை செயலாளராகவும்  செயல்படுகிறார்.


சம்பவத்தன்று ஆட்டோ ஸ்டாண்டில் அபிலாஷ் என்பவர் JCB-யை நிறுத்தி விட்டு, எடுக்க முடியாது  என பிரச்சனை செய்துள்ளார் அதில் மற்ற ஆட்டோ டிரைவர்களுடன் தகராறு நடந்துள்ளது. அதே ஸ்டாண்டில் ஆட்டோ ஓட்டும் இந்த பிரச்சனைக்கு சம்பந்தமில்லாத முஹம்மது ஆஷிக் அவர்கள் இரவு 11 மணியளவில் அண்ணா சிலை அருகில் வரும்போது குளச்சல் 1-வது வார்டு கவுன்சிலர் சுரேஷ் மற்றும் அவருடைய இரண்டு தம்பிகள்  ரமேஸ் குமார், JCB டிரைவர் அபிலாஷ், பொதிகை ஹார்டுவேர் ராஜேந்திரன் மற்றும் பெயர் தெரியாத இரண்டு நபர்கள். சேர்ந்து கடுமையாக தாக்கி உன்னையும், உன் ஆட்டோவையும் கொளுத்தி விடுவேன் என்று  கொலைமிரட்டல் விடுத்தும் மதவெறியை தூண்டும் வகையில் கொச்சையான வார்த்தைகளையும் பேசியுள்ளார்கள். 


இந்து முஸ்லிம் கிறிஸ்தவர்கள் அண்ணன் தம்பிகளாக ஒற்றுமையோடு பழகி வரும் நிலையில், அதை சீர்குலைக்கும் வேலைகளை செய்து, அமைதியாக இருக்கும் குளச்சல் நகரப் பகுதியில் சமூக விரோத போக்கை செய்து வரும் இவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கும்படி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் குமரி  மாவட்ட நிர்வாகிகள் தலைவர் நபில் அஹ்மத், செயலாளர் ஹுஸைன் ஜவாஹிரி, பொருளாளர் செய்யது அகமது கரீம், துணைத் தலைவர் முகம்மது யாசிர் துணைச் செயலாளர்கள் நூருல் அமீன் முகம்மது ராபி நிவாஸ் ஆகியோர் குமரி மாவட்ட கண்காணிப்பாளரிடம் புகார் மனு அளித்தனர். 

No comments:

Post a Comment