குமரி மாவட்டத்தில் ஓணம் பண்டிகை கொண்டாடப்பட்ட வீடுகளில் கடந்த 10 நாட்களும் அத்தப்பூ கோலமிடப்பட்டு இருந்தது. ஓணத்தின் உச்சமான திருவோண பண்டிகை தினமான இன்று வீடுகளில் அத்தப்பூ கோலமிட்டும், ஓணம் ஊஞ்சல் ஆடியும், ஓணம் பாட்டுகள் பாடியும் கொண்டாடினர்.
நாகர்கோவில் வடசேரியில் உள்ள ஓணத்தெருவில் ஓணம் பண்டிகை சிறப்பாக கொண்டாடப்பட்டது. அங்குள்ள பிரம்ம சக்தி அம்மன் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன.குழந்தைகளும் பெண்களும் ஊஞ்சால்கட்டி உற்சாகமாக ஆடினர்.
No comments:
Post a Comment