இவருக்கு காக்கவிளை, கழுவன்திட்டா, ஊரம்பு, கருக்குழி, உட்பட பல பகுதிகளில் குடும்ப பாரம்பரிய நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஏராளமான சந்தன மரங்கள் வளர்ந்து கிடக்கிறது, இந்த மரங்களை இரவு வாள் மூலம் அறுத்து எடுத்து திருடி செல்வது தொடர்கதையாக உள்ளது. ஆறு மாத காலத்திற்குள் ஏராளமான சந்தன மரத்தை திருடி சென்றுள்ளனர்.
திருட்டு போனதாக தகவல் கிடைத்தவுடன் கொல்லங்கோடு காவல் நிலையத்திற்கு கூடுதல் காவல் கண்காணிப்பாளர் தகவல் கொடுப்பாராம். அதேவேளையில் புகார் கொடுக்காத காரணத்தால் போலீசார் திருட்டை கண்டுபிடிக்கும் நடவடிக்கையில் இறங்காமல் இருந்துள்ளனர்.
இதை தங்களுக்கு சாதகமாக கொண்ட திருட்டு கும்பல் சம்பவ தினம் இரவு பத்து மணியளவில் கருக்குழி பகுதியில் உள்ள நிலத்தில் புகுந்து மோட்டார் வாளால் ஒரு சந்தன மரத்தை அறுத்துள்ளனர், சத்தம் கேட்டு பக்கத்தில் வசிப்பவர்கள் பார்த்த போது சம்பந்தபட்ட நிலத்தில் இருந்து இரண்டு பேர் வெளியே வந்துள்ளனர்.
சந்தேகமடைந்த பொதுமக்கள் இரண்டு பேரையும் சுற்றி வளைத்து பிடித்து விசாரித்துள்ளனர், விசாரணையில் பொதுமக்களிடம் சிக்கிய சந்தனமர திருட்டு கும்பல் கொல்லங்கோடு அருகே ஆனப்பாறை பகுதியை சார்ந்த வாலிபர்கள் என்றும் முதலில் மது அருந்த உள்ளே சென்றோம் என்று கூறியுள்ளனர். தொடர்ந்து போலீசுக்கு தகவல் கொடுத்து விட்டோம் என்று கூறியதும் சந்தன மரம் திருடி செல்ல வந்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். இதையடுத்து பொதுமக்கள் கொல்லங்கோடு போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.
ஆனால் சுமார் அரைமணி நேரம் ஆகியும் போலீசார் வராததால் பொதுமக்கள் இரு வாலிபரிடமும் முகவரி வாங்கி விட்டு விடுவித்தனர், சந்தனமர திருட்டு கும்பல் குறித்த சரியான முகவரி போலீசாருக்கு தெரிய வந்ததால், கொல்லங்கோடு சுற்றுவட்டார பகுதிகளில் தொடர் சந்தனமர திருட்டை முடிவுக்கு கொண்டு வர குற்றவாளிகள் மீது கொல்லங்கோடு போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
No comments:
Post a Comment