கன்னியாகுமரி மாவட்டம் அருமனையை அடுத்த மஞ்சாலுமூடு பகுதியில் தோட்டம் ஒன்றில் காயங்களுடன் மயில் ஒன்று சுற்றித் தெரிந்து கொண்டிருந்தது. அதனால் பறக்க முடியவில்லை. இதையடுத்து அந்த மயில் தொடர்பாக பொதுமக்கள் களியல் வனச்சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர்.
சம்பவ இடத்திற்கு வந்த வன ஊழியர்கள் அந்த மயிலை பத்திரமாக மீட்டனர். இதை அடுத்து காயம் அடைந்த மயிலுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டது. பின்னர் வனத்துறை அலுவலகத்திற்கு கொண்டு சென்று அடர்ந்த காட்டுப் பகுதிக்குள் மயில் விடப்பட்டது.
No comments:
Post a Comment