கணக்குப் பதிவியல் மற்றும் தணிக்கையியல் ஆகிய 2 பாடப்பிரிவுகள் 'திடீர்' என்று நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் இந்த 2 பாடப்பிரிவிலும் படித்து வந்த 30-க்கும் மேற்பட்ட மாணவ- மாணவிகள் பொருளாதாரம் மற்றும் உயிரியல் பாடப்பிரிவுகளுக்கு மாற்றப்பட்டு உள்ளனர்.
அதே சமயம் இந்த பாடப்பிரிவுகளை நடத்தி வந்த ஆசிரியர்கள் வேலை இழக்கும் அபாயம் ஏற்பட்டு உள்ளது. வே கொட்டாரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் ‘திடீர்' என்று நிறுத்தப்பட்ட தொழிற்கல்வி பாடப்பிரி வையும் உடனடியாக மீண்டும் தொடங்க வேண்டும் என்று பெற்றோர் - ஆசிரியர் சங்கத்தினர் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
இதற்கிடையில் நிறுத்தப்பட்ட பாடப்பிரிவுகளை நடத்தி வந்த பாதிக்கப்பட்ட ஆசிரியை லட்சுமி இன்று காலை பள்ளிக்கு வந்தார். அவர் தனது நிலை குறித்து பள்ளி நிர்வாகத்திடம் கேட்டார். அப்போது அவர் திடீரென சாலைக்கு வந்து தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டார் இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

No comments:
Post a Comment