ராகுல் காந்தி பாதயாத்திரை குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவல் - காங்கிரஸ் கட்சி கண்டனம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

ராகுல் காந்தி பாதயாத்திரை குறித்து பொன். ராதாகிருஷ்ணன் தவறான தகவல் - காங்கிரஸ் கட்சி கண்டனம்.

ராகுல் காந்தியின் இந்தியா ஒற்றுமை பாதயாத்திரை பொதுமக்கள் மத்தியில் எழுச்சியும் பேராதரவும் கண்டு பாஜகவர் பொய்யான செய்திகளை பரப்புகின்றனர்.


அஞ்சுகிராமம் அருகில் உள்ள பாலத்தில் பிரதமர் மோடி பெயர் கொண்ட கல்வெட்டை சிதைத்ததாகவும் இது கலவர சூழல் உருவாக்குவதாக மத்திய முன்னாள் அமைச்சர் பொன். ராதாகிருஷ்ணன் பத்திரிகையாளர் கூட்டத்தில் கூறியுள்ளார்.


அஞ்சு கிராமம் வழியாக பாதயாத்திரை செல்லவில்லை. இந்திய அமைதிக்கான காந்திய வழி பாதயாத்திரை இதில் வன்முறைக்கு இடமில்லை. ஆயிரக்கணக்கான காங்கிரஸ் தோழர்கள் பொதுமக்கள் கலந்து கொண்ட பாதயாத்திரை மிக அமைதியாக பொதுமக்கள் ஆதரவுடன் குமரி மாவட்டத்தில் நடைபெற்றது. 


இந்தியா முழுவதும் மக்கள் பாராட்டுகிறார்கள். இதை பொறுக்க முடியாமல் பாஜகவினர் புலம்புகின்றனர். ராகுல் இந்தியா ஒற்றுமை பற்றி பத்திரிகையாளர்களுக்கு தவறான தகவல் தெரிவித்த பொன். ராதாகிருஷ்ணனை வன்மையாக கண்டிக்கிறேன். 


தவறான செய்திகளை வெளியிடுவதை பாஜகவினர் நிறுத்திக் கொள்ள வேண்டும். காமராஜர் பற்றி கவலைப்படும் பாஜகவினர், விலைவாசி உயர்வு வேலையில்லா திண்டாட்டம் வெறுப்பு அரசியல் பொதுத்துறை நிறுவனங்கள் விற்பனை பணவீக்கம் பொருளாதார சீரழிவு, போன்றவற்றிற்கு பதில் கூறினால் சிறப்பாக இருக்கும் என ராஜேஷ்குமார் எம்எல்ஏ தெரிவித்துள்ளார். 

No comments:

Post a Comment