குமரி மாவட்டம் - களியக்காவிளை பகுதியில் கழிவுநீர் குழாய் அடைக்கும் பணி தீவிரம்
வீடுகளில் இருந்து வரும் கழிவுநீரை பொது இடங்களில் விட வேண்டாம் என குமரி மாவட்ட ஆட்சியர் அறிவுறுத்தியிருந்தார்.
களியக்காவிளை பேரூராட்சி பகுதியில் சுகாதார விதிகளை மீறி பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை அடைக்கும் பணி மேற்கொள்ளப்பட்டது.
களியக்காவிளை பேரூராட்சி செயல் அலுவலர் ரெமாதேவி தலைமையில் பேரூராட்சி பணியாளர்கள் போற்றிவிளை, பி. பி. எம் சந்திப்பு, சந்தை சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் உள்ள வீடுகள், கடைகள், வர்த்தக நிறுவனங்களில் ஆய்வு செய்தனர்.
அப்போது வீடுகளில் இருந்து சாலைகள், பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றும் குழாய்களை கான்கிரீட் கலவை மற்றும் மூடியை பயன்படுத்தி அடைக்கும் பணியில் ஈடுபட்டனர்.
அடைக்கப்பட்ட குழாய்களை மீண்டும் திறந்து பொது இடங்களில் கழிவுநீரை வெளியேற்றினால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் பேரூராட்சி செயல் அலுவலர் தெரிவித்தார்.
No comments:
Post a Comment