குமரி மாவட்டத்தில் சாரல் மழை தொடர்ந்து பெய்து வருகிறது. நாகர்கோவிலில் இன்று காலையில் சாரல் மழை பெய்தது. கொட்டாரம், மயிலாடி பகுதிகளிலும் விட்டு விட்டு மழை பெய்தது. பேச்சிபாறை, பெருஞ்சாணி அணை பகுதிகளிலும் மழை நீடித்து வருவதால் அணைகளுக்கு மிதமான அளவு தண்ணீர் வந்து கொண்டிருக்கிறது.
சுருளோடு பகுதியில் அதிக பட்சமாக 7. 4 மி. மீ. மழை பதிவாகியுள்ளது. சிற்றார்-1 அணைகளில் இருந்து பாசனத்திற்காக 1009 கன அடி தண்ணீர் வெளியேற்றப்படுகிறது. அணைகளில் இருந்து வெளியேற்றப்படும் தண்ணீர் சானல்களில் ஷிப்ட் முறையில் திறந்து விடப்பட்டு உள்ளது. அணையின் நீர்மட்டத்தை பொதுப்பணித்துறை அதிகாரிகள் கண்காணித்து வருகிறார்கள்.
No comments:
Post a Comment