மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அஸ்வதி பொங்கல் வழிபாடு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 13 September 2022

மண்டைக்காடு பகவதியம்மன் கோயிலில் அஸ்வதி பொங்கல் வழிபாடு.

கன்னியாகுமரி மாவட்டம் மண்டைக்காடு பகவதி அம்மன் கோயிலில் ஆவணித் திருவிழா முதல் நாளான நேற்று சுமங்கலி பூஜையை முன்னிட்டு காலை 4. 30 மணிக்கு கணபதி ஹோமம், 6 மணிக்கு உற்சவ மூர்த்திக்கு பஞ்சாபிஷேகம், 6. 30 மணிக்கு உஷபூஜை, 9 மணிக்கு பஜனை, 10.30 மணிக்கு சத்சங்கம், மதியம் 12 மணிக்கு உச்சபூஜை, மாலை 5. 15 மணிக்கு சுமங்கலி பூஜை ஆகியவை நடந்தது. 


இரண்டாம் நாளான இன்று காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை, 10. 45 மணிக்கு 5001 பொங்கல் வழிபாடு ஆகியவை நடந்தது. சுமார் 5 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் மண்டைக்காட்டி குவிந்து பொங்கலிட்டு அம்மனை வழிப்பட்டனர். 


பொங்காலைக்கு நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் குத்து விளக்கேற்றினார். மேகலை மகேஷ் முதல் பொங்காலையை தொடங்கி வைத்தார். கோயில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், கண்காணிப்பாளர் ஆனந்த், மண்டைக்காடு பேரூராட்சி மன்ற தலைவர் ராணி ஜெயந்தி மற்றும் தேவி சேவா சங்கம், இந்து சேவா சங்கம், ஸ்ரீதேவி கலா மன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 


12. 30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை, தொடர்ந்து அன்னதானம், மூன்றாம் நாள் நாளை மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6. 30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு கோயில் சமய வகுப்பு மாணவர்கள் மற்றும் மண்டைக்காடு தேவஸ்தான மேநிலைப் பள்ளியில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்கள் ஆகியோருக்கு பரிசு வழங்குதல், 8 மணிக்கு அத்தாழ பூஜையுடன் விழா நிறைவு பெறுகிறது. ஏற்பாடுகளை கோயில் நிர்வாகத்தினர் செய்து வருகின்றனர்.

No comments:

Post a Comment