கன்னியாகுமரி மாவட்ட சோசியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா (எஸ்டிபிஐ) கட்சியின் மாவட்ட செயற்குழு கூட்டம் கட்சியின் மாவட்ட அலுவலகத்தில் வைத்து நடைபெற்றது. கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் சத்தார் அலி தலைமை தாங்கினார். மாவட்ட பொது செயலாளர் மணவை சாதிக் அலி வரவேற்புரை நிகழ்தினார்.
கூட்டத்தில் பல்வேறு நிகழ்வுகள் கட்சி வளர்ச்சி மாவட்ட பிரச்சனைகள் பற்றி விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் அடிப்படையில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. மாவட்டம் முழுவதும் கட்சியின் சார்பில் பொதுக் கூட்டங்கள் நடத்துவது என்றும் அதன் துவக்கமாக 26-11-2022 நாகர்கோவிலில் மாபெரும் பொதுக்கூட்டம் நடத்துவது என்று தீர்மானிக்கப்பட்டது.
கட்சியின் அனைத்து மட்ட கூட்டங்களை தொடர்ந்து நடத்துவது. தொகுதி வாரியாக மக்கள் பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பது. செப்டம்பர் -2 ல் நடைபெறும் கிராம சபை கூட்டங்களில் கவுன்சிலர்கள் மற்றும் கட்சியினர் கலந்து கொள்வது. தொடர்ந்து அனைத்து பகுதிகளிலும் PRO சந்திப்புகளை நடத்துவது. 12,13,26,27 தேதிகளில் நடைபெறும் வாக்காளர் பெயர் திருத்தம் முகாம்களில் கட்சியினர் வாக்காளர்கள் பயன்பெற பணியாற்றுவது. மாவட்டத்தில் இந்து முன்னணி மற்றும் இந்துத்துவா பயங்கரவாதிகள் சிறுபான்மையினருக்கு எதிராக நடத்தும் காட்டு மிராண்டி செயல்களை அரசும் மாவட்ட நிர்வாகமும் தடுத்து நிறுத்த வேண்டும்.

மாவட்டம் முழுவதும் மழை காலத்திற்கு முன்பு நீரோடைகளை சீரமைத்து மழைநீர் தேங்காத நிலையை உருவாக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும். கஞ்சா மற்றும் போதைக்கு எதிரான நடவடிக்கையை மாவட்ட கண்காணிப்பாளர் தனி கவனம் செலுத்தி கட்டுப்படுத்தியதை அடுத்து கொஞ்சம் போதை பொருள் நடமாட்டம் குறைந்த தாக தெரிகிறது. இதே வேகமான நடவடிக்கை தொடர்ந்தால் மட்டும் முழுமையாக போதை பொருளை கட்டுக்குள் வைத்திருக்க முடியும் எனவே போதைக்கு எதிரான நடவடிக்கையை தொடர்ந்து செயல்படுத்த வலியுறுத்தியும்.
சிறுபான்மை வழிபாட்டு விஷயத்தில் இந்துத்துவா கும்பலின் அழுத்தத்திற்கு மாவட்ட நிர்வாகமும் காவல்துறையும் பணிந்து விட கூடாது என்பதோடு ஒரு சார்பு நடவடிக்கை எடுக்க கூடாது. கிடப்பில் போடப்பட்ட நான்கு வழிச் சாலையை விரைந்து முடித்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வர வலியுறுத்தியும். தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.
கூட்டத்தில் மாவட்ட அமைப்பு பொது செயலாளர் சாலீம் செயலாளர்கள் ஜப்பார், ஜெஹபர் அலி மாவட்ட நிர்வாகிகள் செயற்குழு உறுப்பினர்கள், தொகுதி தலைவர்கள் கலந்து கொண்டனர். மாவட்ட துணை தலைவர் ஜாஹிர் ஹுசைன் நன்றியுரையாற்றினார்.
No comments:
Post a Comment