தமிழக கடலோர பகுதிகளில் பாதுகாப்பை அதிகரிக்கும்படி தமிழக உளவுத்துறை போலீசார் எச்சரிக்கை செய்து உள்ளனர். இதையடுத்து தற்போது குமரி மாவட்ட கடலோர பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது.
குமரி மாவட்டத்தில் ஆரோக்கியபுரம் முதல் நீரோடி வரை 42 கடற்கரை கிராமங்கள் உள்ளன. கன்னியாகுமரி சின்னமுட்டம், குளச்சலில் கடலோர காவல் நிலைய போலீஸ் நிலையங்கள் இயங்கி வருகின்றன. இங்கு நவீன ரோந்து படகுகளும் உள்ளன. உளவுத்துறை எச்சரிக்கையை தொடர்ந்து தற்போது குமரி கடலோர பகுதிகளில் ரோந்து பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
கடலோர கிராமங்களிலும் இது தொடர்பான விழிப்புணர்வு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. சந்தேகத்துக்குரிய நபர்களின் நடமாட்டம், படகுகள் பற்றிய தகவல்களை உடனடியாக தெரிவிக்கும் மீனவர்களை கேட்டுக் கொண்டுள்ளனர். கடலோர காவல் நிலைய போலீசார் மட்டுமின்றி, கியூ பிராஞ்ச் போலீசாரும் கண்காணிப்பில் ஈடுபட்டு வருகிறார்கள்.
No comments:
Post a Comment