நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் ஓட்டுநர் குடும்பத்துடன் உண்ணாவிரதம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday, 10 November 2022

நாகர்கோவில் ராணி தோட்டம் அரசு போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் ஓட்டுநர் குடும்பத்துடன் உண்ணாவிரதம்.


நாகர்கோவில் அடுத்த பரசேரியை சேர்ந்தவர் அஜித்குமார் (49) இவர் அரசு போக்குவரத்து கழக மார்த்தாண்டம் பணிமனையில் ஓட்டுனராக பணியாற்றி வந்தார், பின்னர் உடல்நிலை சரியில்லாத காரணத்தினால் சிறு வாகன ஓட்டுனராக பணியாற்றி வருகிறார், இந்நிலையில் கடந்த அக்டோபர் மாதம் முதல் அவர் பணியாற்றும் ஜீப்பில் பழுதுபார்க்கும் பணி மேற்கொள்ள இருப்பதால் பணி இல்லை என்று நிர்வாகம் தெரிவித்துள்ளது, அதனை கண்டித்து கடந்த மாதம் 27ஆம் தேதி உண்ணாவிரத போராட்டம் நடத்தினார். 


அப்போது அதிகாரிகள் அஜித்குமாரை அழைத்து பேசி பணி தருவதாக ஒத்துக்கொண்டு பணி வழங்கினர், பின்னர் நிர்வாகத்தின் மூலம் வழங்கிய பணியை மீண்டும் நிறுத்தி வைத்துள்ளதாக தெரிகிறது, எனவே இதனை கண்டித்து இன்று ராணி தோட்டம் போக்குவரத்து கழக அலுவலக வளாகத்தில் குடும்பத்துடன் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment