இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday, 29 November 2022

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம்.


இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாநிலம் தழுவிய கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் குமரி மாவட்ட இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட அமைப்பாளர் செல்வராணி தலைமையில் நாகர்கோவில் பூங்கா அருகில் நடைபெற்றது. தமிழக அரசின் பால்விலை உயர்வு, சொத்து வரி உயர்வு, குடிநீர் கட்டண உயர்வு ஆகியவற்றை உடனே திரும்ப பெற வலியுறுத்தியும், மின்கட்டண உயர்வை திரும்பப் பெற வலியுறுத்தியும், மாதந்தோறும் மின் கட்டணம் கணக்கிடும் முறையை அமுல்படுத்த கோரியும், மூவலூர் இராமாமிர்தம் அம்மையார் நினைவு தாலிக்கு தங்கம் திட்டத்தை மீண்டும் செயல்படுத்திட கோரியும், பாலியல் வன்கொடுமைகளை தடுத்திட தனிசட்டம் நிறைவேற்றிட கோரியும் கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் அருள்குமார் ஆர்பாட்டத்தை தொடங்கி வைத்தார். ஆர்பாட்டத்தில் வெள்ளிமலை பேரூராட்சி உறுப்பினர் சுதா, ஷோபா, ஏ.ஐ.டியு.சியின் மாவட்ட பொருளாளர் அருணாச்சலம், பூதப்பாண்டி பேரூராட்சி துணை தலைவர் அனில்குமார், இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட துணை செயலாளர் நாராயணசுவாமி, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகர செயலாளர் இசக்கிமுத்து, இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட குழு உறுப்பினர் சிரிகுமார் ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள்.


கவன ஈர்ப்பு ஆர்பாட்டத்தை ஏ.ஐ.டி.யு.சியின் மாவட்ட செயலாளர் சுரேஷ் மேசியதாஸ் முடித்து வைத்தார். ஆர்பாட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் மாவட்ட செயலாளர் சுபாஷ் சந்திர போஸ் அனைத்திந்திய முற்போக்கு பேரவையின் மாநில துணைத் தலைவர் பேராசிரியர் சுந்தரம் இந்திய கம்யூனிஸ்டு கட்சியின் நாகர்கோவில் மாநகர பொருளாளர் நாகராஜன் செம்பை கல்யாணசுந்தரம் பூதப்பாண்டி சோமு, பூதலிங்கம் மற்றும் இந்திய மாதர் தேசிய சம்மேளனத்தின் பொறுப்பாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment