உரிய நேரத்தில் பணிக்கு வராமல் தனக்கு கீழ் பணியாற்றும் கிராம செவிலியர்களை தனது கிளீனிற்கு பணிக்கு வரவழைத்து தனது கிளினிக்கிற்கு மட்டும் முக்கியத்துவம் கொடுப்பத. தோவாளை வட்டார அலுவலகத்தில் தனக்கு கீழ் பணியாற்றும் செவிலியர்கள் மற்றும் பணியாளர்களை கட்டுப்படுத்தாமல் சுதந்திரமாக செயல்பட்டு வருவது.

தனது பணியில் உதாசீனமாக செயல்பட்டு வரும் தோவாளை வட்டார பொறுப்பு மருத்துவ அலுவலர் மற்றும் செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதார தலைமை மருத்துவர் ராஜ்குமாரை உடனடியாக பணி நீக்கம் செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும். ஒருவரை நாய் கடித்து 7:00 மணிக்கு தடுப்பூசி செலுத்த சென்றவரை வீட்டிற்கு செல்ல நேரமாகிவிட்டது என்று கூறி தடுப்பூசி செலுத்தாமல் வீடிற்கு சென்ற செண்பகராமன்புதூர் அரசு ஆரம்ப சுகாதாரநிலைய செவிலியர் விஜயா மீது நடவடிக்கை எடுக்க கோரி தமிழ்நாடு தலித் துறைகள் பாதுகாப்பு இயக்கம் சார்பில் குமரி மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு வழங்கப்பட்டது.
No comments:
Post a Comment