கன்னியாகுமரி மாவட்டம் சாமியார்மடம் அருகே கஞ்சிமடம் பகுதியில் சித்திரம்கோட்டில் உள்ள டிரினிட்டி பள்ளி வாகனம் இரண்டு குழந்தைகளை ஏற்றிக்கொண்டு வந்து கொண்டிருந்தது. எதிரே வந்த இருசக்கர வாகனத்திற்கு. வழிவிட்டபோது நிலை தடுமாறு சக்கரம் சாலையை விட்டு நகர்ந்து சென்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாணலின் கவிழ்ந்தது.

அருகில் இருந்த பொதுமக்கள் வேகமாக வந்து வாகனத்தின் உள்ளிருந்த இரண்டு குழந்தைகளையும், ஓட்டுநர் மற்றும் ஆயாவையும் மீட்டனர். ஓட்டுனரின் சாமர்த்தியத்தால் வாகனத்தில் இருந்தவர்கள் சிறு காயங்களுடன் உயிர் தப்பினார்கள்.

No comments:
Post a Comment