கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே கஞ்சா வழக்கு உட்பட பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய சுரேஷ் (53) என்பவரை அவரது அண்ணன் மகன் அருள் ஜெனித் (28) அரிவாளால் வெட்டிக்கொலை செய்துள்ளான், இருவருக்கும் இடையே நிலம் தொடர்பான தகராறு இருந்து வந்த நிலையில், சம்பவத்தன்று மது குடிக்கும் போது போதையில் ஏற்பட்ட தகராறில் இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கியுள்ளனர்.
இதில் அருள் ஜெனித் திடீரென சுரேஷை அரிவாளால் சரமாரியாக வெட்டியுள்ளார். இதில் சம்பவ இடத்திலே சுரேஷ் பலியானார் இந்த கொலை தொடர்பாக சுசீந்திரம் போலீசார் கொலையாளி அருள் ஜெனித்தை கைது செய்து விசாரணை நடத்தினர் வருகின்றனர்.

No comments:
Post a Comment