மாலத்தீவில் நடந்த தீ விபத்தில் மரணமடைந்த கன்னியாகுமரி மாவட்டம் காஞ்சிரகோடு பகுதியை சேர்ந்த தம்பதிகள் ஜெனிஸ்-சுந்தரி ஆகியோரது இல்லத்திற்கு கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் அவர்கள் சென்று அவரது தாய், சகோதரர்கள் மற்றும் குடும்பத்தினருக்கு ஆறுதல் கூறினார்.
மேலும் அரசு சார்ந்த அனைத்து உதவிகளும் ஆவன செய்வேன் என உறுதியளித்தார். இதில் குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் தலைவர் பினுலால் சிங், மாநில பொதுக்குழு உறுப்பினர் ரத்ன குமார், குமரி மேற்கு மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் திபாகர், கிள்ளியூர் மேற்கு வட்டார காங்கிரஸ் தலைவர் N. A குமார் ஆகியோர் உடனிருந்தனர்.

No comments:
Post a Comment