கீரிப்பாறையில் செயல்படும் அரசு ரப்பர் தோட்டத்தில் காளிகேசம், பரளியாறு, மணலோடை ஆகிய 4 பிரிவுகளிலும் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில் அவர்களுக்கான ஊதிய உயர்வு என்பது 3 ஆண்டுகளுக்கு ஓர் முறை உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், கடந்த 6 ஆண்டுகளாக ஊதிய உயர்வு வழங்காததால், கீரிப்பாறை அரசு ரப்பர் தொழிற்சாலை முன் தோட்டக்கலை தொழிலாளர்கள் கடந்த 7-ம் தேதி முதல் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டு வருகின்றனர்.
நியாயமான கோரிக்கைக்காகத் தொழிலாளர்கள் நடத்தி வரும் காத்திருப்பு போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து இன்று கன்னியாகுமரி நாடாளுமன்ற உறுப்பினர் போராட்டத்தில் ஈடுப்பட்டு வரும் தோட்டக்கலை தொழிலாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய நாடாளுமன்ற உறுப்பினர் விஜய் வசந்த் உறுதி செய்யப்பட ஊதிய உயர்வு தற்போது வரை வழங்காதது மிகவும் வேதனை அளிப்பதாக தெரிவித்தார்.

No comments:
Post a Comment