இதில் தமிழ்நாடு ஜூடோ அசோசியேசன் சார்பில் சென்சாய் பிரபு, சென்சாய் சங்கர், ஆகியோர் கலந்து கொண்டு மாணவ மாணவிகளுக்கு பயிற்சி அளித்தனர். இந்த பயிற்சி முகாமில் பல்வேறு பள்ளிகளை சேர்ந்த மாணவ மாணவிகள் கலந்து கொண்டனர்.

இந்த பயிற்சி முகாமில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலர் ராஜேஷ் அவர்கள் சான்றிதழ் வழங்கி பாராட்டினார். இந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ஜூடோ அசோசியேஷன் மாநில பொதுச் செயலாளர் முரளி அவர்கள் சென்செய் அஜித், சென்செய் தாணு சென்செய் பிரபு சென்செய் - பினோஜ் பி.சாம், சென்செய் முத்துக்குமார் ஆகியோருக்கு புதிய ஜூடோ பயிற்சி மையம் அமைப்பதற்கு உரிய உரிமம் வழங்கினார்.
இதில் கன்னியாகுமரி டிஸ்ட்ரிக்ட் அசோசியேசன் அமைப்பின் மாவட்ட செயலாளர் ஜெய கர்ணன், கௌரவ தலைவர் ராஜகோபால், செயற்குழு உறுப்பினர்கள் ரமேஷ், ராஜேஷ், நவஜோதி பள்ளியின் தாளாளர். ராஜேஸ்வரி, துணை முதல்வர் அரசி, பிரின்ஸ் அகிலா, ஷைலா, உடற்கல்வி ஆசிரியை சோபா, மாணவ மாணவிகளின் பெற்றோர் உட்பட பலர் பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment