கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பழைய துறைமுக கடற்கறை பகுதியினை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்கள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 15 April 2023

கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் பழைய துறைமுக கடற்கறை பகுதியினை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், துவக்கி வைத்தார்கள்.


கன்னியாகுமரி மாவட்டம் குளச்சல் நகராட்சி சார்பில், குளச்சல் பழைய துறைமுக கடற்கரையோர பகுதியினை தூய்மைப்படுத்தும் பணியினை மாவட்ட ஆட்சித்தலைவர் .பி.என்.ஸ்ரீதர்,   பத்மநாபபுரம் சார் ஆட்சியர் எச்.ஆர்.கௌசிக், முன்னிலையில்  துவக்கி வைத்து, தெரிவிக்கையில்:-

கன்னியாகுமரி மாவட்டத்தை பசுமை மாவட்டமாக மாற்றும் வகையில் மாநகராட்சி, நகராட்சிகள், பேரூராட்சிகள், மற்றும் ஊராட்சி பகுதிகளில் பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. குறிப்பாக திடக்கழிவு மேலாண்மை, நீர் நிலைகள் ஆக்கிரமிப்புகள் அகற்றுதல் மற்றும் ஏரிகள், கால்வாய்கள். குளங்கள் உள்ளிட்ட நீர்நிலை பகுதிகளை தூர் வாரி தூய்மைப்படுத்தும் பணி அந்தந்த துறைகளின் சார்பில் நடைபெற்று வருகிறது. ஒருமுறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் தடுப்பு நடவடிக்கை, மழைநீர் சேகரிப்பு, மாங்ரோ மரக்கன்றுகள் வளர்ப்பது, சாலையோரங்கள், கடற்கரையோர பகுதிகள் தூய்மை பணிகள் உள்ளிட்ட பசுமை நடவடிக்கைகள் மாவட்டம் முழுவதும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.


அதன் ஒரு பகுதியாக குளச்சல் பழைய ,துறைமுக கடற்கரையோர பகுதியினை தூய்மைப்படுத்தும் பணி துவக்கி வைக்கப்பட்டுள்ளது. இத்தூய்மை பணிகளில் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள் உள்ளிட்டோர் ஆர்வத்துடன் ஈடுபட்டு, தூய்மை பணியினை சிறப்பாக மேற்கொண்டார்கள்.சேகரிக்கப்பட்ட குப்பைகளை அப்புறப்படுத்திட துறைசார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.

மேலும், பொதுமக்கள் நமது மாவட்டத்தை குப்பையில்லா குமரி மாவட்டமாகவும், பசுமை மாவட்டமாக மாற்ற மாவட்ட நிர்வாகம் மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பு நல்க வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர்  தெரிவித்தார்கள்.


முன்னதாக, மாவட்ட ஆட்சித்தலைவர் பி.என்.ஸ்ரீதர், தலைமையில், பத்மநாபுரம் சார் ஆட்சியர் அவர்கள் முன்னிலையில், தூய்மை பணியாளர்கள், தன்னார்வலர்கள், கல்லூரி மாணவ, மாணவியர்கள் தூய்மை உறுதிமொழியினை எடுத்துக்கொண்டார்கள்.


இந்நிகழ்ச்சியில், குளச்சல் நகராட்சி ஆணையர் விஜயகுமார், கல்குளம் வட்டாட்சியர் கண்ணன் சுற்றுச்சூழல் உதவி செயற்பொறியாளர் பாரதி, நகரங்கள் தூய்மை மக்கள் இயக்கம் புதிய இந்தியா இயக்கம், பேரிடர் கால நண்பர்கள். அருணாச்சலா கலை மற்றும் அறிவியல் கல்லூரி மாணவியர்கள், கொட்டாரம் அன்னை வேளாங்கண்ணி பொறியியல் கல்லூரி மாணவ, மாணவியர்கள், தன்னார்வலர்கள், பொதுமக்கள் உட்பட துறைசார்ந்த அலுவலர்கள் பலர் கலந்து கொண்டார்கள்.

No comments:

Post a Comment