கன்னியாகுமரி பேரூராட்சிக்கு உட்பட்ட லூர்து மாதாதெரு, சின்னமுட்டம், இந்திரா காலனி ஆகிய பகுதிகளில் சிங்காரவேலர் குடியிருப்பு மற்றும் ஆதி திராவிட நலத்துறை சார்பில் மாவட்ட ஆட்சித் தலைவர் ஸ்ரீதர் தலைமையில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் ரெ. மகேஷ் முன்னிலையில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் த. மனோ தங்கராஜ் மற்றும் கன்னியாகுமரி சிறப்பு நிலை பேரூராட்சி தலைவர் குமரி ஸ்டீபன் முன்னிலையில் 69 பயனாளிகளுக்கு இலவச வீட்டு மனை பட்டா வழங்கினார்.


இந்த நிகழ்ச்சியில் கோட்டாட்சித் தலைவர் சேதுராமன், செயல் அலுவலர் ஜீவநாதன் மற்றும் அகஸ்தீஸ்வரம் ஒன்றிய தி மு க செயலாளர் பா.பாபு, மாநில மீனவர் அணி செயலாளர் த ஜோசப் ஸ்டாலின், வர்த்தகர் அணி மாநில இணைச்செயலாளர் தாமரை பாரதி, பேரூராட்சி துணைத் தலைவர் ஜெனஸ்மைக்கேல் வார்டு கவுன்சிலர்கள் பூலோக ராஜா, இக்பால், சிவசுடலைமணி, வினிற்றாமெல்வின், ஆட்லின்சேகர், டெல்பின்ஆன்டனி, தி மு க நிர்வாகிகள் நாஞ்சில் மைக்கேல், நிசார், திரு சகாயராஜ், அன்பழகன், பிரைட்டன், ஆன்டனி, லில்லிமேரி, ராஜ், சேக்,ரஞ்சித், ரூபின், முத்துராமன், சிலுவை, ஷ்யாம், பாபு, ரூபன், கரோங்கர் உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment