தற்பொழுது ஆளூரில் தண்ணீர் பற்றாக்குறை என்பது மிகப்பெரிய பிரச்சனையாக உருவெடுத்து வருகிறது. ஆளூர் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருக்கும் போது அவ்வப்போது வந்து கொண்டிருந்த குடிநீர் பிரச்சனை, தற்பொழுது மாநகராட்சியாக மாறிய பிறகு தொடர்ச்சியாக இன்று வரை குடிநீர் தட்டுப்பாடு நிலவி வருகிறது. பல மனுக்கள், கோரிக்கைகள் வைக்கப்பட்டும் அதற்கான தீர்வுகள் இன்று வரை ஏற்படவில்லை.


ஆளூர் சிறப்பு நிலை பேரூராட்சியாக இருக்கும் போது ஒரு நாள் விட்டு விட்டு 3 மணி நேரங்கள் வந்த தண்ணீர். தற்பொழுது மாநகராட்சி ஆன பிறகு 2 நாட்கள், 3 நாட்கள், 4 நாட்கள் விட்டு, 1 மணி நேரம் மட்டுமே தண்ணீர் வருகிறது. இரண்டு மூன்று நான்கு நாட்களுக்கு ஒருமுறை ஒரு மணி நேரம் வரும் குடிநீர் குடும்பங்களின் தேவைக்கு போதுமானதாக இல்லை.
ஊரே தண்ணீர் பற்றாக்குறையில் இருக்கும் போது, மாநகராட்சிக்கு உட்பட்ட ஆளூர் பல்நோக்கு சமூக நலக்கூடத்தில் மட்டும் பல திருமணங்கள் நடக்கிறது அதற்கான தண்ணீர் விநியோகமும், எந்த தடங்களும் இல்லாமல் வந்து கொண்டிருக்கிறது. இது சம்பந்தமாக, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், கன்னியாகுமரி மாவட்டம், ஆளூர் கிளை கிளை தலைவர் முஹம்மது இஸ்மாயில், கிளை செயலாளர் ஹசன் சாதலி, கிளை பொருளாளர் முஹம்மது சுலைமான், ஆகியோர் 02-06-2023 வெள்ளியன்று ஆளூரில் நிலவும் குடிநீர் பிரச்சனை சம்பந்தமாக நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் மற்றும் , மாமன்ற உறுப்பினர் T தங்கராஜா ஆகியோரை நேரில் சந்தித்து மனு அளித்தனர். மேலும் முதலமைச்சரின் நேரடி உதவிமையத்திற்கும் (CM Cell) மனு அனுப்பப்பட்டது.
இந்த சந்திப்பில் மாநகராட்சி மேயர் அவர்கள், இது சம்பந்தமாக விரைந்து நடவடிக்கை எடுத்து தருவதாக உறுதியளித்தார்.
No comments:
Post a Comment