பழுதான படகுகளில் பயணிக்கும் மலைவாழ் மக்கள்; படகுகளை மாற்ற கோரிக்கை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Tuesday 20 June 2023

பழுதான படகுகளில் பயணிக்கும் மலைவாழ் மக்கள்; படகுகளை மாற்ற கோரிக்கை.


கன்னியாகுமரி மாவட்டத்தின் விவசாயத்திற்கு முக்கிய நீராதாரமாக உள்ள பேச்சிப்பாறை அணையை கடந்து மலைவாழ் மக்கள் செல்ல படகு போக்குவரத்து உள்ளது. 48 அடி கொள்ளளவு கொண்ட அணையில் தற்போது 38 அடி தண்ணீர் உள்ளது. இந்த அணையில் இயக்கப்படும் படகுகள் பெரும்பாலும் ஓட்டை உடைசலாக உள்ளது. 


பள்ளி கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவியர் இந்த படகில் தான் பயணம் செய்கின்றனர்.  உபகரணங்கள் எதுவும் அணியாமல் ஆபத்தான முறையில் இந்த பயணம் செய்கின்றனர். ஓட்டை உடைசல் படகுகளை மாற்றி மலைவாழ் மக்களுக்கு கட்டணமின்றி  படகு இயக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரிடம் பழங்குடியின மாணவ மாணவிகள் கோரிக்கை வைத்த நிலையில் இதுவரையிலும் நடவடிக்கை எடுக்கவில்லை. 


விபத்து ஏற்படும் முன் அங்குள்ள படகுகளை அப்புறப்படுத்த வேண்டும் என்று மலைவாழ் மக்கள் தெரிவித்துள்ளனர்.

No comments:

Post a Comment