குளச்சல் நகர பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 23 June 2023

குளச்சல் நகர பள்ளியில் பொதுத்தேர்வில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த மாணவ மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கும் நிகழ்ச்சி விஜய்வசந்த் எம். பி பங்கேற்பு.


குளச்சல் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் குளச்சல் நகர 5 பள்ளிகளில் பொது தேர்வு 10 மற்றும்12 ம் வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் 2வது இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து நினைவு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி இலப்பவிளை அரசு உயர் நிலைப் பள்ளியில்  நடைபெற்றது. 


கன்னியாகுமரி பாராளுமனற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், நகர் மன்ற தலைவர் நசீர்  வழங்கினார். நிறைவாக கன்னியாகுமரி பாரளுமன்ற விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து நினைவு பரிசு மற்றும் ஊக்கதொகை வழங்கினார். 


விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாசர், தலைமை ஆசிரியர்  ரெஜு,  மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், கவுன்சிலர்கள் கோமளா, ரமேஷ், நசிர், திமுக செயலாளர் நாகூர்கான்,  முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி அமீதுல் அக்பர், மற்றும் முஸ்லிம் முகல்ல கன்வீனர் பஷீர்கோயா, செயலாளர் ஜலாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர். 

No comments:

Post a Comment