குளச்சல் முன்னாள் மாணவர் சங்கம் சார்பில் குளச்சல் நகர 5 பள்ளிகளில் பொது தேர்வு 10 மற்றும்12 ம் வகுப்பில் முதல் மதிப்பெண் மற்றும் 2வது இடங்களை பிடித்த பள்ளி மாணவ மாணவியரை தேர்ந்தெடுத்து நினைவு பரிசு மற்றும் ஊக்க தொகை வழங்கும் நிகழ்ச்சி இலப்பவிளை அரசு உயர் நிலைப் பள்ளியில் நடைபெற்றது.
கன்னியாகுமரி பாராளுமனற உறுப்பினர் விஜய்வசந்த் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார். குளச்சல் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ், நகர் மன்ற தலைவர் நசீர் வழங்கினார். நிறைவாக கன்னியாகுமரி பாரளுமன்ற விஜய் வசந்த் மற்றும் சட்டமன்ற உறுப்பினர் பிரின்ஸ் ஆகியோர் இணைந்து நினைவு பரிசு மற்றும் ஊக்கதொகை வழங்கினார்.
விழாவில் பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் நாசர், தலைமை ஆசிரியர் ரெஜு, மாவட்ட காங்கிரஸ் துணைத் தலைவர் முனாப், நகர தலைவர் சந்திரசேகர், கவுன்சிலர்கள் கோமளா, ரமேஷ், நசிர், திமுக செயலாளர் நாகூர்கான், முன்னாள் மாணவர் சங்க நிர்வாகி அமீதுல் அக்பர், மற்றும் முஸ்லிம் முகல்ல கன்வீனர் பஷீர்கோயா, செயலாளர் ஜலாலுதீன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment