கன்னியாகுமரி மாவட்டம் தெற்கு சூரங்குடி இலந்தையடி தட்டு கிராமத்தில் பெருந்தலைவர் காமராஜர் நற்பணி மன்றம்" சார்பில் 8 அடி உயர சிலை நிறுவ அனுமதி பெறப்பட்டுள்ளது. இதற்காக நற்பணி மன்ற நிர்வாகிகள் விஜய்வசந்த் MP சந்தித்து நிதி வழங்குமாறு கோரிக்கை வைத்தனர்.
இந்த கோரிக்கையை ஏற்று பெருந்தலைவர் காமராஜர் சிலை அமைக்க கன்னியாகுமரி பாராளுமன்ற உறுப்பினர், விஜய்வசந்த் MP தனது சொந்த நிதியிலிருந்து ரூபாய் 1 லட்சம் வழங்க ஒப்புக்கொண்டார். அதற்கான காசோலையை நற்பணி மன்ற நிர்வாகிகளிடம் வழங்கினார். ராஜாக்கமங்கலம் காங்கிரஸ் கமிட்டி வட்டார தலைவர் அசோக்ராஜ் உடனிருந்தார்.
No comments:
Post a Comment