தமிழக கடலோர பாதுகாப்பு குழுமம் சார்பில் மீனவ இளைஞர்களுக்கான திறன் மேம்பாட்டு பயிற்சி கடந்த 3 மாதங்களாக கன்னியாகுமரியில் நடைபெற்று வந்தது.இதில் குமரி, நெல்லை உள்பட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த 39 மீனவ இளைஞர்கள் கலந்துகொண்டு பயிற்சி மேற்கொண்டனர்.
இப்பயிற்சியின் நிறைவு நாளான இன்று அவர்களுக்கு சான்றிதழ்களும், பதக்கங்களும் வழங்கப்பட்டதோடு, கடும் பயிற்சி மேற்கொண்ட இளைஞர்களுக்கு குமரி எஸ்.பி.ஹரிகிரண் பிரசாத் தனது கரங்களால் மட்டன் பிரியாணியை பரிமாறினார்.
No comments:
Post a Comment