கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக வருகிற 24-ம் தேதி குமரி வருகை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 22 July 2023

கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக வருகிற 24-ம் தேதி குமரி வருகை.


தமிழ்நாடு கவர்னர் ஆர்.என்.ரவி இரண்டு நாள் பயணமாக நாளை மறுநாள் 24 ஆம் தேதி மாலை இரண்டு மணி அளவில் கன்னியாகுமரி வருகிறார். இதற்காக தூத்துகுடியில் இருந்து கார் மூலம் கன்னியாகுமரி அரசு விருந்தினர் மாளிகை வரும் அவர்,மாலையில் சூரிய அஸ்தமன காட்சியை கண்டு ரசிக்கிறார். 

பின்னர் மீண்டும் அரசு விருந்தினர் மாளிகைக்கு தங்க செல்கிறார். மறுநாள் 25ஆம் தேதி காலையில் சூரிய உதயத்தை கண்டு ரசித்த பின்னர் பூம்புகார் கப்பல் போக்குவரத்து கழகத்தில் இருந்து படகு சவாரி செய்து கடல் நடுவே அமைந்துள்ள விவேகானந்தர் நினைவு மண்டபம் சென்று தியானம் செய்கிறார். 


தொடர்ந்து பகவதி அம்மன் கோவில் மற்றும் சுசீந்திரம் தாணுமாலய சுவாமி ஆகிய கோவில்கள் சென்று சாமி தரிசனம் செய்கிறார், இதனைத் தொடர்ந்து விவேகானந்த கேந்திர வளாகத்தில் உள்ள ராமாயண தரிசன கண்காட்சி கூடத்தை பார்வையிட்டு,தியான மண்டபத்தில் தியானம் செய்கிறார்.மாலை  இரண்டு மணியளவில் புறப்படுகிறார்.கவர்னர் வருகையை முன்னிட்டு கன்னியாகுமரியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டு வருகிறது.

No comments:

Post a Comment