தடிக்காரன்கோணம் கீரிப்பாறை சாலையை உடனடியாக செப்பனிட வலியுறுத்தி நாகர்கோவில் நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் அலுவலகத்தில் சிபிஐ எம் கட்சியின் சார்பில் காத்திருப்பு போராட்டம் வட்டார செயலாளர் எஸ். மிக்கேல் தலைமையில் நடைபெற்றது. மாவட்ட செயலாளர் ஆர் செல்லசுவாமி தொடக்கி வைத்து பேசினார்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஏ.வி. பெல்லார்மின், மாவட்ட செயற்குழு உறுப்பினர்கள் எம்.ஏ. உசைன், எஸ். அந்தோணி, என்.எஸ்.கண்ணன், ஆகியோர் வாழ்த்தி பேசினர். அங்கு வந்த நெடுஞ்சாலைத்துறை கோட்டப் பொறியாளர் பாஸ்கரன் போராட்டத்தில் கலந்து கொண்டவர்களிடம், சாலையை உடனடியாக செப்பனிட்டு தருவதாக உறுதி கூறினார். இதனைத் தொடர்ந்து போராட்டம் தற்காலிகமாக கைவிடப்பட்டது.
இதில் மோகன், மனோகரன், ராஜன், முருகன், சுலைமான், சக்திவேல், வடிவேல் குமார், மிக்கேல் நாயகி, பேதுரு, மணி உட்பட பலர் கலந்து கொண்டனர்.
No comments:
Post a Comment