பிரேக் இல்லாத அரசு பேருந்தை RTO அலுவலகத்தில் ஒப்படைத்த அரசு ஓட்டுநர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 19 July 2023

பிரேக் இல்லாத அரசு பேருந்தை RTO அலுவலகத்தில் ஒப்படைத்த அரசு ஓட்டுநர்.


கன்னியாகுமரி மாவட்டம் அரசு போக்குவரத்து கழக ராணி தோட்டம் பணிமனையில் ஓட்டுநராக இருப்பவர் கென்னடி. TN74N1841 என்ற எண்ணிட்ட அரசு பேருந்தை ஓட்டி வந்தார்.

அந்த பேருந்து மிகவும் பழுதடைந்து மோசமான நிலையில் இருந்துள்ளது. மேலும், இரண்டு மூன்று நாட்களாக சரியாக பிரேக் பிடிக்காமல் இருந்துள்ளது. இது குறித்து சம்பந்தபட்ட அதிகாரிகளிடம் முறையிட்ட நிலையிலும், தொடர்ந்து அந்தப் பேருந்தை இயக்குமாறு அதிகாரிகள் அழுத்தம் கொடுத்தனர். இதனால் வேதனை அடைந்த ஓட்டுனர் கென்னடி, பேருந்தில் இருந்த பயணிகளை இறக்கி விட்டு விட்டு, நேராக பேருந்தை வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு ஓட்டி வந்து பேருந்தை போக்குவரத்து அலுவலரிடம் ஒப்படைத்தார்.


தமிழக வரலாற்றில் இது போன்ற சம்பவம் இதுவே முதல் முறையாக கருதப்படுகிறது. பிரேக் இல்லாத அரசு பேருந்தை  RTO அலுவலகத்தில் ஒப்படைத்த அரசு ஓட்டுநர், குறித்து சமூக வலைத்தளத்தில் செய்தி பரவி வருகின்றன.

No comments:

Post a Comment