தமிழ்நாடு காவல்துறையினர் இடையிலான 63 வது மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 16 September 2023

தமிழ்நாடு காவல்துறையினர் இடையிலான 63 வது மண்டலங்களுக்கு இடையிலான போட்டிகளில் வெற்றி பெற்ற காவலர்களை பாராட்டிய மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.


தமிழ்நாடு காவலர்களுக்கு இடையிலான 63-வது மண்டல விளையாட்டுப் போட்டிகள் சென்னை மாநகர காவல் மைதானத்தில் வைத்து கபடி, பழுத்தூக்குதல், மல்யுத்தம் போன்ற பல்வேறு போட்டிகள்  நடைபெற்றது.

கன்னியாகுமரி மாவட்ட ஆன்லைன் வழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் திருமதி.கீதா அவர்கள் பளு தூக்கம்  போட்டியில் முதல் பரிசும்,   மண்டைக்காடு காவல் நிலைய  முதல்நிலைப் பெண் காவலர் திருமதி கிருஷ்ணரேகா அவர்கள் இரண்டாம் பரிசும் பெற்றனர். மேலும் பெண்கள் கபடி அணியினர் மூன்றாம் பரிசு பெற்றனர்.


இதனை பாராட்டு வகையில் இன்று மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. D.N. ஹரி கிரன் பிரசாத் IPS அவர்கள் மாவட்ட காவல் அலுவலகத்தில் வைத்து வெற்றி பெற்றவர்களை பாராட்டி சான்றிதழ்கள் வழங்கினார்.


மேலும் ஹரியானா மாநிலத்தில் வைத்து நடைபெற உள்ள பளு தூக்கும்  போட்டியில் ஆரல்வாய்மொழி காவல் நிலைய உதவி ஆய்வாளர் *திருமதி.கீதா* அவர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளார். 

No comments:

Post a Comment