நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 28 September 2023

நாகர்கோவில் மாநகராட்சி பகுதியில் ரூ.63 லட்சம் மதிப்பில் வளர்ச்சி திட்ட பணிகள்.

நாகர்கோவில் மாநகராட்சியில் 1-வது வார்டுக்குட்பட்ட புன்னவிளை பகுதியில் ரூ.20 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி. 16-வது வார்டுக்குட்பட்ட ஹனீபா நகரில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் கருந்தளம் அமைக்கும் பணி. 31-வது வார்டுக்குட்பட்ட கார்மல் நகர், திருக்குடும்ப ஆலயம் டிரஸ்ட் எதிரே உள்ள தெருவில் ரூ.3 லட்சம் மதிப்பீட்டில் கான்கிரீட் தளம் அமைக்கும் பணி உள்ளிட்ட பணிகளின் தொடக்க விழா நடைபெற்றது. 


இதில் மேயர் மகேஷ் கலந்துகொண்டு பணிகளை தொடங்கி வைத்தார். அப்போது மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்ஸி லதா, மாநகராட்சி உதவி பொறியாளர் சந்தோஷ், மண்டல தலைவர் செல்வகுமார், ஜவகர், மாமன்ற உறுப்பினர்கள் தங்கராஜ், அமல செல்வன், சோபி உட்பட பலர் கலந்துகொண்டனர். 

No comments:

Post a Comment