அகஸ்தீஸ்வரம் பேரூர் தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்கள் ஆலோசனை கூட்டம் அகஸ்தீஸ்வரம் தெற்கு சாலையில் உள்ள சமூகநலக்கூடத்தில் நேற்று இரவு நடந்தது. அகஸ்தீஸ்வரம் தெற்கு ஒன்றிய தி.மு.க. செயலாளர் பாபு தலைமை தாங்கினார். தி.மு.க. தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.எஸ். பார்த்தசாரதி, பேரூர் கழக அவைத்தலைவர் கணேசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் கன்னியாகுமரி கிழக்கு மாவட்ட தி.மு.க. செயலாளரும், நாகர்கோவில் மாநகராட்சி மேயருமான மகேஷ், கன்னியாகுமரி சட்டமன்ற தொகுதி பொறுப்பாளரும் மாநில விளையாட்டு மேம்பாட்டு அணி துணை செயலாளரு மான நம்பி ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்துகொண்டு தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆலோசனைகளை வழங்கி னர். முடிவில் மாவட்ட தி.மு.க. பொறியாளர் அணி துணை அமைப்பாளர் தமிழன் ஜானி நன்றி கூறினார். கூட்டத்தில் மாவட்ட இளைஞர்அணி அமைப்பாளர் அகஸ்தீசன், துணை அமைப்பாளர் சரவணன், மாவட்ட பொறியாளர் அணி அமைப்பாளர் ராதா கிருஷ்ணன், மாவட்ட பிரதிநிதி பிரேம்ஆனந்த், ஒன்றிய பிரதிநிதிகள் அகஸ்தியலிங்கம், நாகமணி, அகஸ்தீஸ்வரம் பேரூராட்சி தலைவி அன்பரசி ராமராஜன் உள்பட தி.மு.க. நிர்வாகிகள், அகஸ்தீஸ்வரம் பேரூர் வாக்குச்சாவடி பாக முகவர்கள், கிளை செயலாளர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வருகிற பாராளுமன்ற தேர்தலில் தி.மு.க. கூட்டணி வேட்பாளரின் வெற்றிக்காக அயராது பாடுபட வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது.
- கன்னியாகுமரி மாவட்டம் செய்தியாளர் என்.சரவணன்
No comments:
Post a Comment