கொட்டாரம் காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகள் தினவிழா P. T. செல்வகுமார் பரிசு வழங்கினார். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Thursday 16 November 2023

கொட்டாரம் காது கேளாதோர் பள்ளியில் குழந்தைகள் தினவிழா P. T. செல்வகுமார் பரிசு வழங்கினார்.

கொட்டாரம் சி.எஸ்.ஐ.காது கேளாதோர் உயர்நிலைப்பள்ளியில் குழந்தைகள் தினவிழா நடந்தது விளையாட்டுப் போட்டி, நடனப்போட்டி, மாறுவேடப்போட்டி, நடந்தது. தலைமை தாங்கி மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி பி.டி செல்வகுமார் பேசினார். மாற்றுத்திறனாளி குழந்தைகள் கடவுளின் அன்பிற்கு பாத்திரமானவர்கள், அந்த குழந்தைகளின் திறமையை ஆற்றலை சிறப்பாக வெளி காட்டினார்கள். 


இப்படிப்பட்ட குழந்தைகளின் கல்விக்காக மேம்பாட்டிற்காக உழைக்கும் ஆசிரியர்களை நினைத்து பெருமைப்படுகிறேன் அவர்களை புறந்தள்ளி மன உளைச்சலை உருவாக்கி, பிச்சை எடுக்க வைக்கும் சமூகத்தில் இப்படி ஒரு பள்ளியை உருவாக்கிய பெரியோர்களையும் நடத்துகின்ற நிர்வாகத்தையும் பாராட்டுகிறேன் இவர்களோடு கலந்து கொண்ட இந்த நிகழ்வை வாழ்நாள் பாக்கியமாக கருதுகிறேன் கோவையை சார்ந்த காதுகேளாத பெண் தர்ஷினி கபடியில் மாநில அளவில் சாதனை படைத்துள்ளார்.


இந்நிகழ்வில் தாளாளர் கிங்ஸ்லி  உதவி தலைமை ஆசிரியர் ஸ்மைலி ஆசிரியர் வேத சிகாமணி மற்றும் ஆசிரியர்களுக்கும் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment