13 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை திறந்து வைத்தார் விஜய் வசந்த் MP. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Monday 8 January 2024

13 லட்சம் மதிப்பீட்டில் நியாயவிலை கடை திறந்து வைத்தார் விஜய் வசந்த் MP.


பேச்சிப்பாறை ஊராட்சிக்கு உட்பட்ட மலைவாழ் கிராமமான தச்சமலை பகுதியில் உள்ள குற்றியார், தச்சமலை, தோட்டமலை உட்பட பல மலை வாழ் மக்கள் தங்கள் பகுதியில் நியாயவிலை கடை அமைத்து தர வேண்டும் என்று கோரிக்கை விடுத்தனர். அதற்கான முயற்சிகள் மேற்கொண்டு மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான தச்சமலையில் நியாய விலை கடை கட்டுவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து  ரூ13.00 லட்சம் ஒதுக்கீடு செய்து நியாய விலை கடை அமைக்க  அடிக்கல் நாட்டபட்டது.அந்த கட்டிடம் கட்டி முடிக்கப்பட்ட நியாய விலை கடை கட்டிடத்தை மக்கள் பயன்பாட்டிற்கு விஜய் வசந்த் MP திறந்து வைத்தார்.

இந்நிகழ்வில் திருவட்டார் மேற்கு வட்டாரத் தலைவர் திரு. வினுட்ராய்,  பேச்சிப்பாறை ஊராட்சி கமிட்டி தலைவர் திரு.குமார், AICC உறுப்பினர் திரு. ரத்தினகுமார் வார்டு தலைவர்கள், காங்கிரஸ் பேரியக்க‌ நிர்வாகிகள், ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

No comments:

Post a Comment