காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday 13 January 2024

காவலர்களின் குடும்பங்களுக்கான பொங்கல் விளையாட்டு போட்டிகள்.


கன்னியாகுமரி மாவட்டம், காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. E. சுந்தரவதனம் IPS உத்தரவிட்டார்கள். உத்தரவின்படி, கடந்த இரண்டு நாட்களாக ஆயுதப்படை காவலர்கள் மற்றும் தாலுகா காவல் நிலைய காவலர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. 

இன்று  காவலர்களின் குடும்பத்தினருக்கு Music chair, Towel fold Challenge போன்ற விளையாட்டு போட்டிகளும் மற்றும் குழந்தைகளுக்கு Frog Jump, Lucky Corner, Ball Picking மற்றும் தடகள போட்டிகளும்   மாவட்ட ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெற்றது.


இந்த விளையாட்டு போட்டிகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் E.சுந்தரவதனம் அவர்கள் இன்று துவக்கிவைத்தார்கள். மேலும் வெற்றி பெற்றவர்களுக்கான பரிசுகள் நாளை காலை 9:30 மணிக்கு ஆயுதப்படை மைதானத்தில் வைத்து நடைபெறும் நிகழ்ச்சியில் வழங்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment