கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர்.E.சுந்தரவதனம் தலைமையில் சமத்துவ பொங்கல் விழா மாவட்ட ஆயுதப்படை மற்றும் காவலர் குடியிருப்பு பகுதியில் வைத்து நடைபெற்றது. மேலும் பொங்கல் விழா கொண்டாட்டத்தின் போது நடைபெற்ற விளையாட்டு போட்டிகளில் கலந்துகொண்டு வெற்றி பெற்ற காவலர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினருக்கு பரிசு பொருள்கள் வழங்கி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்கள் பாராட்டினார்கள்.
இந்நிகழ்ச்சியில், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.சுப்பையா, கூடுதல் காவல் கண்காணிப்பாளர் திரு.மதியழகன், நாகர்கோவில் உட்கோட்ட உதவி காவல் கண்காணிப்பாளர் செல்வி.யாங்சென் டோமா பூடியா இ.கா.ப, மற்றும் காவல் ஆய்வாளர்கள், உதவி ஆய்வாளர்கள் உடனிருந்தனர்.
No comments:
Post a Comment