சில நாட்களுக்கு முன்னர் நாகர்கோவில் டெரிட் ஜங்ஷனில் அரசு பஸ் சென்டர் மீடியனில் மோதியது . இந்த விபத்தில் 20 க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர்.நேற்று முன்தினம் வடசேரியில் சென்ட்ரல் மீடியனில் கார் மோதியது.இந்நிலையில் நேற்று இரவு பார்வதிபுரம் கட்டயன்விளை பகுதியில் சென்டர் மீடியனில் அரசு பஸ்,லாரி மற்றும் கார் அடுத்தடுத்து மோதி விபத்துக்குள்ளானது.
இதில் மூன்று பேர் காயமுற்றனர்.*டார்ச் லைட் உதவியுடன் மீட்பு பணி*விபத்து நடந்த இடத்தில் சாலை இருபுறமும் எந்தவிதமான தெரு விளக்கு வசதியும் இல்லை சென்டர் மீடியனில் எந்தவித எச்சரிக்கை விளக்குகளும் எரிவது இல்லை இதனால் விபத்துக்கள் அதிகளவில் இரவு நேரங்களில் நடக்கிறது. இரவு மூன்று வாகனங்கள் விபத்தில் சிக்கிய நிலையிலும் பொதுமக்கள் டார்ச் லைட் மற்றும் செல்போன் லைட் உதவியுடன் வாகனங்களை மீட்டனர்.
சென்டர் மீடியம் அமைந்துள்ள பகுதியில் எந்த வித எச்சரிக்கை விளக்குகளும் மேலும் சாலை ஓரங்களில் போதிய விளக்குகள் இல்லாததே தொடர் விபத்துக்கு காரணம் எனவும் உடனடியாக இந்த சென்டர் மீடியம் அணைத்தும் மாற்ற படவேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை*
No comments:
Post a Comment