கடந்த முறை காங்கிரஸ் சார்பாக திருச்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். இம்முறை அதே தொகுதியைக் குறிவைத்து காய்களை நகர்த்தி வந்தார் திருநாவுக்கரசர். ஆனால், அவருக்கு உட்கட்சி அளவில் எதிரான மனநிலைதான் நிலவுகிறது.மேலும், அவருக்கு சீட் கொடுக்கக் கூடாது என கட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு தலைமைக்கும் அனுப்பப்பட்டுள்ளது. இதனால், அவருக்கான வாய்ப்பு தள்ளாட்டத்தில்தான் இருந்தது. தற்போது, அவருக்கு அந்த சீட் கிடைக்காது என்பது உறுதி செய்வது போல், திருச்சி தொகுதியை மதிமுக சார்பில் போட்டியிடும் துரை வைகோவுக்கு கொடுப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளதாக தகவல் சொல்லப்படுகிறது.
எனவே, திமுக கூட்டணியில் தனக்கு சீட் வழங்கப்படாது என்பதை உணர்ந்து கொண்ட திருநாவுக்கரசர், காங்கிரஸிலிருந்து வெளியேறி பாஜக அல்லது அதிமுக இணையவிருக்கிறார் என்னும் தகவல் சொல்லப்படுகிறது.
No comments:
Post a Comment