குமரி – பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர். - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Friday 8 March 2024

குமரி – பேருந்து சேவையை தொடங்கி வைத்த அமைச்சர்.


கன்னியாகுமரி மாவட்டம் கிள்ளியூர் ஒன்றியத்துக்குட்பட்ட  தேங்காப்பட்டணத்தில் இருந்து கன்னியாகுமரிக்கு அரசு பஸ் இயக்கப்பட்டு வந்தது. ஆனால் கடந்த சில வருடங்களாக இந்த பஸ் சரிவர இயங்கவில்லை. இதை அடுத்து பஸ்ஸை முறைப்படி இயக்க வேண்டும் என  அப்பகுதியினர்  கிள்ளியூர் ஒன்றிய திமுக மூலம்   அமைச்சரிடம் கோரிக்கை விடுத்திருந்தனர். இதை அடுத்து தேங்காப்பட்டணம் – கன்னியாகுமரி தடத்தில் அரசு பஸ் இயக்க நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது. 

இதற்கான தொடக்க விழா விழுந்தயம்பலம் சந்திப்பில் நடைபெற்றது.அமைச்சர் மனோ தங்கராஜ் கொடியசைத்து பஸ் சேவை தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் போக்குவரத்து கழக பொது மேலாளர் மெர்லின் ஜெயந்தி, வணிக மேலாளர் கரோலின் சிங், கன்னியாகுமரி கிளை மேலாளர் பெரியசாமி, கிள்ளியூர் ஒன்றிய திமுக செயலாளர் கோபால், கீழ்குளம் பேரூராட்சி தலைவர் சரளா கோபால், கிள்ளியூர் பேரூராட்சி துணைத் தலைவர் சத்யராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

No comments:

Post a Comment