வீடு புகுந்து பெண்ணை கட்டி போட்டு நகை பணம் கொள்ளை. - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Wednesday 3 April 2024

வீடு புகுந்து பெண்ணை கட்டி போட்டு நகை பணம் கொள்ளை.


கொல்லங்கோடு அருகே சூழால் பகுதியை சேர்ந்தவர் செல்வராஜ் அரசு பேருந்து டிரைவர் ஆக இருந்து ஓய்வு பெற்றவர். கடந்த சாலை விபத்தில் பலியானார். இவரது மனைவி கீதா (56) இவர் கேரளாவில் உள்ள ஒரு பள்ளியில் ஊழியராக வேலை பார்த்து ஓய்வு பெற்றவர். இவரது மகளை நாகர்கோவிலில் செண்பகராமன் புதூர் பகுதியில் திருமணம் செய்து கொடுத்துள்ளனர். மகன் சென்னையில் வேலை பார்த்து வருகிறார்.

நேற்று கீதா வீட்டில் தனியாக இருக்கும் போது 2 -பேர் கீதா வீட்டுக்கு வந்து மருமகனின் உறவினர்கள் எனவும், திருமண அழைப்பிதழ் தர வந்துள்ளதாக கூறி வீட்டிற்குள் சென்றுள்ளனர். வீட்டுக்கு சென்றவர்கள் மிளகாய் பொடியை கீதாவின் கண்களில் வீசி, கீழே தள்ளி கையை டவ்வலால் கட்டி விட்டு அவரது வாயில் பிளாஸ்டரால் ஒட்டியுள்ளனர்.


பின்னர் கத்தியை காட்டி பீரோவை திறந்து 9 -பவுன் தங்க நகைகள் மற்றும் 5- ஆயிரம் ரூபாய் பணத்தை திருடி சென்றனர். அவர்கள் சென்ற பிறகு கீதா தனக்கு தானே கட்டுகளை அவிழ்த்து, வாயில் ஒட்டி இருந்த பிளாஸ்டிரை அகற்றி, வீட்டிற்கு வெளியே வந்து சத்தம் போட்டார். அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர், இது சம்பந்தமாக கொல்லங்கோடு போலீசில் புகார் செய்து போலீசார் அந்த பகுதியில் உள்ள சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வழக்கு பதிவு செய்தனர். மேலும் குளச்சல் ஏ.எஸ்.பி பிரவீன் கவுதம் சம்பவ இடத்திற்கு சென்று பார்வையிட்டு விசாரித்தார். 

No comments:

Post a Comment