கன்னியாகுமரியில் குடிநீர் கிடைக்காமல் சுற்றுலா பயணிகள் அவதியடைந்து வருகின்றனர்.கன்னியாகுமரி சுற்றுலா ஆர்வலர்கள் கூறியதாவது: கோடை சீஸனை முன்னிட்டு கன்னியாகுமரியில் எவ்வித அடிப்படை வசதிகளையும் ஏற்படுத்தி கொடுக்காமல் பேரூராட்சி நிர்வாகம் அலட்சியம் காட்டி வருகிறது.
படகு இல்லத்துக்கு செல்லும் வழியில் சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் கிடைக்கும் வகையில் குழாய்கள் உள்ளன. கடந்த சில மாதங்களாக இவற்றில் குடிநீரே வருவதில்லை. தற்போது கோடை சீஸனிலும் இவற்றை சரிசெய்ய பேரூராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கவில்லை பேரூராட்சி நடவடிக்கை எடுக்கப்படுமா சுற்றுலா பயணிகளும் பொது மக்களும் சமூக ஆர்வலர்களும் குற்றச்சாட்டு வைக்கின்றனர்.
No comments:
Post a Comment