சொந்த செலவில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட காவலர்களுக்கு மூன்று வேளை உணவு அளித்த கன்னியாகுமரி காவல் கண்காணிப்பாளர்.
கன்னியாகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்கள் செய்த செயல் தற்சமயம் கன்னியாகுமரியில் உள்ள விவேகானந்தர் தியான பீடத்தில் தியானம் மேற்கொள்ள வந்துள்ள பாரத பிரதமர் அவர்களின் பாதுகாப்பு பணியில் உள்ள ஒட்டுமொத்த தமிழக காவல்துறையினருக்கும் மூன்று வேளை உணவும் சிறப்பாக ஏற்பாடு செய்து அந்த உணவையும் அமரவைத்து அனைவரையும் சாப்பிடவும் வைத்துள்ளார். இது தமிழக காவல்துறையினர் வெளி மாவட்டங்களுக்கு பாதுகாப்பு அலுவலுக்காக செல்லும் காவலர்களின் பணி வரலாற்றில் இது ஒரு மாபெரும் புரட்சியே கருதப்படுகிறது. இவர் செய்த இந்த மிகப்பெரிய புண்ணிய செயலை காவல்துறையில் இன்னும் பல ஆண்டுகளுக்கு பேசப்படும் என்பதில் ஐயமில்லை எனவே அன்னதான பிரபுவாக மாறிய கன்னியாகுமரி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் அவர்களுக்கு ஈரோடு மாவட்ட காவல்துறை சார்பாக மனமார்ந்த நன்றியினை தெரிவித்தனர்.
No comments:
Post a Comment