நாகர்கோவில் மாநகராட்சி பொறியாளர் பணி ஓய்வு நாளில் பணி இடை நீக்கம் செய்ததை போன்று, நாகர்கோவில் TWAD Board பொறியாளர்களை பணி இடை நீக்கம் செய்தால் தான் நாகர்கோவில் மாநகர பகுதிகளில் குடிநீர் குழாய்கள் சீரமைக்க உடைக்கப்படும் புதியதாக போடப்பட்ட சிமெண்ட் மற்றும் தார் சாலைகளை ஒப்பந்ததாரர்களை கொண்டு தரமாக சீரமைப்பார்கள் என்று தோன்றுகிறது, அந்த அளவிற்கு தோண்டப்படும் சாலைகள் தரமாக சீரமைக்கப்படாமல் குண்டும் குழியுமாக இருப்பதால் அதில் இருசக்கர வாகனங்களில் பயணிப்பவர்கள் விழுவதும், பெரிய வாகன சக்கரங்கள் புதையுண்டு போக்குவரத்து நெரிசல் ஏற்பட காரணமாகிறது. ஆகையால் மாவட்ட ஆட்சியர் அவர்களும் மாநகராட்சி ஆணையர் அவர்களும் TWAD Board பொறியாளர் மீது நடவடிக்கை எடுத்து தரமான பணிகளை செய்து பயணிப்பவர்கள் விபத்து இல்லாத பயணம் மேற்கோள்வதை உறுதி செய்ய வேண்டும் என்று கேட்டுகொள்கிறோம்.
இடம் :- மாநகர வார்டு 22 மற்றும் 16, கிறிஸ்துநகர் வாட்டர் டேங் ரோடு சந்திப்பு.
No comments:
Post a Comment