போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி
கன்னியாகுமரி மாவட்ட போக்குவரத்து காவல்துறை, கலப்பை மக்கள் இயக்கம் மற்றும் கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல் நிலைப்பள்ளி சார்பாக போதை தடுப்பு விழிப்புணர்வு பேரணி இன்று கன்னியாகுமரி பகுதியில் நடைபெற்றது
எனக்கு வேண்டாம் நமக்கு வேண்டாம் போதை ஒழியட்டும் பாதை ஒளிரட்டும் என்ற வார்த்தைகளை மாணவர்கள் முழங்க பேரணியாக நடைபெற்றது.
இந்த பேரணியை தலைமை தாங்கிய துணை காவல் கண்காணிப்பாளர் திரு மகேஷ் குமார் மற்றும் கலப்பை மக்கள் இயக்கம் தலைவர் திரு P.T. செல்வகுமார் அவர்கள் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.கன்னியாகுமரி புனித அந்தோனியார் மேல் நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர் பிரசன்னா முன்னிலையில் ஆசிரியர்கள், மாணவ மாணவிகள் மற்றும் கன்னியாகுமரி போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் பேரணியாக கலந்துகொண்டனர்..
No comments:
Post a Comment