சர்வதேச போதைப்பொருள் தடுப்புதினம்
கன்னியாகுமரி மாவட்ட நிர்வாகம் மற்றும் குழந்தைகள் நலன் & சிறப்பு சேவைகள் துறை சார்பில் சர்வதேச போதப்பொருள் தடுப்பு தினம் - 2024 முன்னிட்டு மாவட்டத்தில் பல்வேறு இடங்களில் இருந்து தொடங்கிய உலகப்போதை விழிப்புணர்வு ஜோதி ஓட்டத்தினை நாகர்கோவில் அண்ணா விளையாட்டு அரங்கத்தில் நிறைவு நிகழ்வில் வணக்கத்துக்குரிய மேயர் குமரி கிழக்கு மாவட்ட செயலாளர் திரு.ரெ.மகேஷ் அவர்கள் கலந்து கொண்டு போதை ஒழிப்பு உறுதிமொழி எடுத்து , ஜோதி ஓட்டத்தினை நிறைவு செய்த பின் போதை ஒழிப்பு புத்தகம் மற்றும் ஸ்டிகரை வெளியிட்டு சிறப்புரையாற்றினார். தலைமை டாக்டர்.பிரான்சிஸ் சேவியர் நெல்சன், திருமதி.ஷகிலாபாணு மாவட்ட குழந்தைகள் நலன் மற்றும் சிறப்பு சேவைகள் துறை, துணை மேயர் திருமதி.மேரி பிரின்ஸி லதா, மண்டலத்தலைவர் திரு.ஜவஹர், தலைமை செயற்குழு திரு.சதாசிவம், வட்ட செயலாளர் திரு.வேல்முருகன் மற்றும் மாணவ மாணவியர்கள், ஆசிரியர், ஆசிரியைகள் மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.
கன்னியாகுமரி மாவட்ட செய்தியாளர், என். சரவணன்
No comments:
Post a Comment