வாகன காப்பகமாக மாறிவரும் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம்
நாகர்கோவில் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் இருசக்கர வாகனம் மற்றும் நான்கு சக்கர வாகனங்களை நிறுத்திவிட்டு அருகிலுள்ள அலுவலகம், மற்றும் கடைகளுக்கு பணிக்கு செல்வதால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் வாகன நெருக்கடி.
இன்று பக்ரீத் பண்டிகையை ஒட்டி அரசு விடுமுறையாகும். ஆனால் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் உள்ள அனைத்து அலுவலகங்களும் செயல்படும்போது பணியாளர்கள், அதிகாரிகள் தங்களுடைய இருசக்கர வாகனத்தில் பணிக்கு வந்தால் எவ்வளவு இருசக்கர வாகனம் இருக்குமோ அந்த அளவு விடுமுறை நாளிலும் இருசக்கர வாகனம் குவிந்து உள்ளது.
இப்படி தங்களுடைய வாகன பாதுகாப்புக்காக நிறுத்தி வைத்து விட்டு செல்வதால் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணி செய்பவர்கள் வாகனங்கள் நிறுத்துவதற்கும், பல்வேறு தேவைகளுக்காக மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு வரும் பொதுமக்களின் வாகனங்களை விடுவதற்கு இடையூறு ஏற்பட்டு வருகிறது.
No comments:
Post a Comment