கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 149-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி ஆட்சியர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அவர்களின் 149-வது பிறந்த நாளையொட்டி கன்னியாகுமரி மாவட்ட ஆட்சித்தலைவர் திருமதி.ஆர்.அழகுமீனா, இ.ஆ.ப., அவர்கள் சுசீந்திரம் கிராம நிர்வாக அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள, அன்னாரது முழு திருவுருவ சிலைக்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தினார்கள்.
உடன் நாகர்கோவில் வருவாய் கோட்டாட்சியர் செல்வி.எஸ். காளீஸ்வரி செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் திரு.பா.ஜாண் ஜெகத் பிரைட் அகஸ்தீஸ்வரம் வட்டாட்சியர் திரு.மூர்த்தி உதவி மக்கள் தொடர்பு அலுவலர் திருமதி.செல்வ லெட் சுஷ்மா சுசீந்திரம் பேரூராட்சி தலைவர் திருமதி.அனுஷியா சுசீந்திரம் பேரூராட்சி செயல் அலுவலர் திருமதி.கமலேஸ்வரி உட்பட பலர் கலந்து கொண்டார்கள்.
No comments:
Post a Comment