புதுக்கடை அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை - தமிழக குரல் - கன்னியாகுமரி

சமீபத்திய நிகழ்வு

Post Top Ad

Post Top Ad

Saturday, 31 August 2024

புதுக்கடை அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை


 புதுக்கடை அருகே மூதாட்டிக்கு பாலியல் தொல்லை 


புதுக்கடை அருகே ஹெலன் நகர் கடற்கரை கிராமத்தை சேர்ந்தவர் மூதாட்டி.இவர் தனியாக வசித்து வருகிறார்.அதே பகுதியை சேர்ந்தவர் ஆன்டனிபிரின்ஸ்(30) இவர் மீன்பிடி தொழில் செய்து வருகிறார்.நேற்று அதிகாலை சுமார் 2 மணியளவில் ஆன்டனிபிரின்ஸ், மூதாட்டி வீட்டில் புகுந்துள்ளார்.அங்கு உறங்கி கிடந்த மூதாட்டி அருகில் சென்று படுத்து பாலியல் முயற்சியில் ஈடுபட்டுள்ளார்.


திடிரென விழித்த மூதாட்டி சத்தம் போட்டு மறுப்பு தெரிவிக்கவே அவரை கடுமையாக தாக்கியுள்ளார்.இதில் காயமடைந்த மூதாட்டி குழித்துறை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை அனுமதிக்கப்பட்டார் இது தொடர்பான புகாரின் பேரில் புதுக்கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜானகி வழக்கு பதிவு செய்து ஆன்டனிபிரின்சை கைது செய்து சிறையில் அடைத்தனர்.


கன்னியாகுமரி மாவட்ட கல்குளம் தாலுகா செய்தியாளர். A.அனிதா

No comments:

Post a Comment